சவால் விடுகிறேன்.. தமிழகத்தில் கட்டாய மதமாற்றமில்லை என முதல்வர் கூற முடியுமா?.. குஷ்பு
சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என முதல்வர் ஸ்டாலினால் கூற முடியுமா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் சவால் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பு பேசுகையில் எல்லோரின் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் வலியும் வேதனையும் தெரியும். இதுவரை இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?

கட்டாய மதமாற்றம்
மதம் மாற்றம் குறித்து இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே? அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்றால் அந்த குழந்தை பேசியது பொய்யா?

காங்கிரஸ் கட்சி
சிறுமியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியே கிடையாது. மாநில தலைவர் அண்ணாமலையின் துணிச்சல், தைரியம் தெரிய வேண்டுமானால் கர்நாடகா சென்று கேளுங்கள். அவரை சும்மாவா தமிழக பாஜக தலைவராக நியமித்தோம். நியாயத்திற்கு மட்டுமே பாஜகவினர் போராடுபவர்கள். அவர்களுக்கு துணிச்சல் எப்போதுமே உண்டு.

தஞ்சை எஸ்பியை நீக்க வேண்டும்
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா என கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications