கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்.. இதை மட்டும் திமுக அரசு செய்துவிட்டால் ஓஹோ பாராட்டு மழைதான்!
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்களுக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வடசென்னை பகுதி மக்கள் மணலி டூ கோயம்பேடு; கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துயரத்தைப் போக்குவதற்கு விரைவான தீர்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளுமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
வடசென்னையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா பகுதி நோக்கி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தாண்டி கிளாம்பாக்கத்துக்கு பொதுமக்கள் வந்து தென்மாவட்ட பேருந்துகளை தேடி கண்டுபிடித்து ஏறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு செல்லும் தங்களுக்கு மன உளைச்சல்தான் அதிகம் என குமுறுகின்றனர்.

எவ்வளவு உளைச்சல்: கிளாம்பாக்கம் சென்னை மாநகரில் இருந்து வெகுதொலைவில் செங்கல்பட்டுக்கு அருகே இருப்பது உண்மைதான். சரி கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டது. எண்ணூர், மணலி, திருவொற்றியூரில் பெருமளவு தென்மாவட்ட மக்கள் வசிக்கின்றனர். கிளாம்பாக்கத்தை எட்டிப் பிடிக்கவே 2,3 மணிநேரமாகிவிடுகிறது. இது பெரும் அயற்சியைத்தான் தருகிறது. இத்தகைய அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் எளிதான தீர்வு ஒன்றையும் பொதுமக்களே முன்வைக்கின்றனர்.
'கிளாம்பாக்கம்' பேருந்து நிலையம்.. பேசாம செங்கல்பட்டுக்கு கொண்டு போங்க..குமுறும் தென் மாவட்ட மக்கள்!
பேருந்து நிலையங்கள் ஒருங்கிணைப்பு: அதாவது மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்குமான பேருந்துகளை இயக்கலாம். மாதவரத்தில் இருந்து மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தினால் சென்னை மாநகருக்குள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த வெளிவட்ட சாலையில்தான் திருமழிசையும் இணைகிறது.
பொங்கல் பயணம்.. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.. இதை படிங்க
இப்படி சென்னையை சுற்றிய புறநகர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் போது மக்களின் அலைச்சலும் மன உளைச்சலும் இயல்பாகவே அகலும்; அரசுக்கும் நற்பெயரும் கிடைக்கும். இவ்வளவு செய்த தமிழ்நாடு அரசு செலவோடு செல்வாக சென்னை மாநகரை சுற்றிய அனைத்து புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் ஆகக் குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது அனைத்து மாவட்ட பேருந்துகளும் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரலாம். இதன் சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்தும் முடிவெடுக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிகை. அரசு கவனத்தில் கொள்ளுமா?
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications