Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் "மேலே" கவனிச்சீங்களா? முடிச்சூர் மண்ணிவாக்கத்தில் யார்னு பாருங்க? சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு தொடர்பான பணிகள் வேகமெடுத்து வரும்நிலையில், அது தொடர்பான சில தகவல்களும் வெளியாகி உள்ளன.

கிளாம்பாக்கத்தில் பேருந்து இணைப்புகளை தவிர வேறு எதுவும் இல்லாததே பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணமாகிவிட்டது. அதனால்தான், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் தெற்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது.. தற்போது அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Kilambakkam Bus Terminus Fantastic Sky Walk Bridge Images and what are the Major Move about Omni Bus Mannivakkam Mudichur

கிளாம்பாக்கம்: அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மற்றும் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில், இந்த ஸ்கை வாக் அமைக்கப்பட உள்ளது... அதேபோல எஸ்கிலேட்டர்கள், லிப்ட்கள் போன்றவைகளுடன் கூடிய, நடை மேம்பாலமும் அமைய உள்ளது.

கிளாம்பாக்கத்துக்கு ஸ்கைவாக் வந்துவிட்டால், பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எளிதாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட முடியும்.. இதனால் நேரம் மிச்சமாவதுடன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேல் இந்த ஸ்கைவாக் அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது...

ஆம்னி பஸ்கள்: அந்தவகையில், 74 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்... கடந்த 2 நாட்களாகவே, கிளாம்பாக்கம் ஸ்கைவாக் எப்படி இருக்கும் என்பது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.. அந்த மாதிரி குறித்த கட்டிட வடிவமைப்புகள் மக்களை ஈர்ப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

மற்றொரு பக்கம், ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்காக முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் நிறுத்துமிட பணிகளும் துரிதமாகி வருகின்றன.. அதேபோல, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்குவது தொடர்பான ஆலோசனைகளும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள்: நேற்றைய தினம்கூட, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்... அப்போது, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்து ஆம்னி பஸ்களை தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும், முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ்களுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இதில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.. ஆம்னி பஸ்களுக்கு அதிகளவு அபராதம் விதிக்கக் கூடாது என்ற உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

முடிச்சூர்: முன்னதாக, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சென்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறுத்தம் தயாராகும் என உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்.

கிளாம்பாக்கத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பஸ்களுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஏற்கனவே உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+