கிறங்கடிக்கும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு.. 100 தாழ்தள அரசு பஸ்.. சிஎம்டிஏவுக்கு லெட்டர்.. நிம்மதி
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் வசதிகள் கோரி வரும்நிலையில், 100 தாழ்தள அரசு பஸ்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டிருப்பினும், மாநகர பஸ்கள் உட்பட மேலும் சில அடிப்படையான வசதிகளையும் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து எழுந்துவருகின்றன..

ஆம்னி பஸ்கள்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டில் இருந்தபோதே, காலை 7 மணிக்கு மேல் சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.. அது பீக் ஹவர் என்பதால், ஒரு சில பஸ்கள் மட்டும் உள்ளே வந்துசெல்லும்.. ஆனால், இப்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் இறங்கி, பஸ்கள் வழியாக மட்டுமே சென்னைக்குள் வர முடியும்.. அதனால்தான், இணைப்பு போக்குவரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், ஆம்னி பஸ்களுக்கு இடவசதியில்லை.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருக்கிறது.. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
100 பஸ்கள்: மேலும், கிளாம்பாக்கத்தில் முழு வசதிகள் செய்து தரும்வரை, கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், வெளியூர் செல்வோர் வசதிக்காக, 100 தாழ்தள பஸ்கள் வாங்க வேண்டும் என்பதால், 91 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்று கேட்டு எம்டிசியான மாநகர போக்குவரத்து கழகம், சிஎம்டிஏவுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தில், "சென்னையில் இப்போதைய நிலவரப்படி, தினமும், 659 வழித்தடங்களில், 3,233 நடைகள் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் தேவை அதிகரித்திருக்கிறது.. இதனால், கிளாம்பாக்கத்துக்கு மக்கள் சென்று வருவதற்கு தினமும், 298 பஸ்களை, 2,990 முறை இயக்க வேண்டியுள்ளது. இதற்காக வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள், கிளாம்பாக்கத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளன..
அதிக சுமை: இந்நிலையில், அதிக சுமைகளுடன் வெளியூர் செல்வோரின் தேவையை கருதி, அதிநவீன வசதிகள் உடைய, 100 தாழ்தள பஸ்கள் வாங்க திட்டமிட்டு, தமிழக அரசு வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால், புதிய பஸ்கள் வாங்கும் செலவை சமாளிக்க, 91 கோடி ரூபாயை, சிஎம்டிஏ நிதியில் இருந்து கொடுத்து உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications