கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் டூ பஸ் ஸ்டாண்ட்.. ஆகாய நடைமேடை! இப்படித்தான் இருக்க போகுதாம்
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு செல்ல ஆகாய நடைமேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நடைமேடை எப்படி இருக்கும் என்பது தொடர்பான கிராபிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் சென்னை மார்க்கெட் அருகே இருந்த பேருந்து நிலையத்தில் இயங்கி வந்தன. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கவும் அரசு முடிவு செய்தது.
நகரும் படிக்கட்டுகள்: நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவையுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைய உள்ளது. இதனிடையே, இந்த நடைமேம்பாலத்தின் கிராபிக் படங்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தில் உள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பட இருக்கும் ஆகாய நடைமேம்பாலம் மூலம் மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நேரடியாக சென்று விட முடியும்.
12 மாதத்திற்குள் முடிக்க: இந்த ஆகாய நடைபாலம் அமைய இருப்பதால், சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழல் பயணிகளுக்கு ஏற்படாது. பயணிகள் லக்கேஜ்களை கொண்டு செல்ல ஏதுவாக மிகவும் விரிவாக இந்த நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தின் கிராபிக் வீடியோ படங்கள் பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
மேலும் லிப்ட், நகரும் படிக்கட்டு வசதிகளும் வருகின்றன. நடைமேம்பால பணியை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய ரயில்நிலையம் அமையும்போது நடை மேம்பாலம் பணியும் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இந்த பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. தற்போது முழு அளவில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பக்கத்திற்கு பயணிகள் வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசின் நிதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications