சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்.. மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: கொடைக்கானலில் தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ரவி "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இனி வரும் காலங்களில் டெஸ்க்கில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும்" என்று கூறினார். அதுமட்டும் இன்றி சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications