சீனப் பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறக்கக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: சீனப்பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறந்துவிடக்கூடாது என என்றும், அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக இழப்பை இந்தியாவில் சரிகட்ட சீனா முயற்சிப்பதாகவும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதாகவும், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து கொள்கின்ற நிகழ்வு வரவேற்புரியது எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு உலக வரைபடத்தில் மாமல்லபுரத்தை அடையாளம் காட்டக்கூடியதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரம் இந்தச்சந்திப்பின் போது இந்தியா வெகு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வதற்காக இந்தியாவுடன் உறவாட சீனா விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் சந்திப்பு, சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியாவில் விற்க வழிவகை செய்யுமானால், அது இந்திய உற்பத்தித்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி இருக்கும் இந்தியாவுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், அதனால் தான் சீன அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் பொருட்களுக்கு சீனாவில் வரியில்லை என அறிவித்திருப்பது, வர்த்தக ரீதியில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன அதிபர் நட்பு ரீதியாக இந்தியாவுக்கு வருவதை குறை சொல்லவில்லை என்றும், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை கவனமுடன் கையாள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications