3வது அலை வந்துருமோ.. "இந்த" மாவட்டத்துக்குதான் நிறைய சான்ஸ்.. பயங்கர அலர்ட்டில் "கொங்கு"..!
கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது
சென்னை: கொரோனா வைரஸ் 3வது அலையை கட்டுப்படுத்த, இப்போதே கொங்கு மண்டலம் தயாராகிவிட்டது.. அதற்கான முன்னெடுப்புகளிலும் மும்முரமாக இறங்கி வருகிறது..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பிடியில் கொங்கு மண்டலம் சிக்கி கொண்டது.. வழக்கமாக சென்னைதான் வைரஸ் பாதிப்பில் முன்னிலையில் இருக்கும்.. ஆனால், இந்த முறை சென்னையை கோவை முந்திவிட்டது..
"கோவையை காப்பாற்றுங்கள்" என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார்.. இதற்கு பிறகுதான், முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு 2 முறை சென்று நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்..

சுகாதாரத்துறை
சுகாதார துறையும் வீரியத்துடன் முழு மூச்சாக செயல்பட்டது.. மக்களும் அரசின் விதிகளை ஏற்று நடந்தனர்.. இதையடுத்து தொற்று கொங்கு மண்டலத்தில் மெல்ல மெல்ல குறைந்தது.. எத்தனையோ முறை, லாக்டவுன்களில் தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தாலும், கொங்குவின் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளை அமல்படுத்தவில்லை.. அது தற்போது நல்ல பலனை தந்து வருகிறது.. தொற்று பாதிப்பு ஒருபக்கம் குறைந்து வந்தாலும் தடுப்பூசிகளை செலுத்தும் பணியும் விறுவிறுவென நடந்து வருகிறது.

பாதிப்பு எண்ணிக்கை
கோவை மாவட்டத்தில் குறைந்தது ஒருநாளைக்கு 200 கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.. ஆனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துவிட்டது.. அதேபோல, கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் டிஸ்சார்ஜ் ஆகி சென்று வருகின்றனர்.. மாவட்டத்தில் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

தடுப்பூசி
எனினும் 3வது அலை பரவல் கோவையை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.. ஏனெனில், கோவையில் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வெறும் 43 சதவீதமாக உள்ளதால், 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தொற்று பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத்துறையினர் மட்டுமல்ல, மக்களும் தயாராக இருக்க வேண்டும், அதுவும் அடுத்த ஒரு மாதத்துக்குள் 3-வது அலை வர வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அலர்ட் செய்துள்ளனர்.

ஈரோடு
ஈரோட்டை பொறுத்தவரை கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மறுபடியும் ஆரம்பமாகி உள்ளது.. காரணம், ஈரோடு மாவட்டத்தில்தான், 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது... உயிரிழப்புகூட இந்த மாவட்டத்தில்தான் அதிகம்... அதனால் மக்கள் அச்சத்திலேயே இருந்தனர்.. அதிலும் அந்த நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது..

சளி, காய்ச்சல்
இப்போது, மாநகராட்சி சார்பில் 300 அதிகாரிகள், 1,200 தன்னார்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ளதா என ஆய்வு நடத்தி, கொரோனா டெஸ்ட் செய்து வருகிறார்கள். அதேபோல, நீலகிரியை பொறுத்தவரை தொற்று பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது.. ஆனால், இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவதால், தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது..

கர்நாடகா
அதேசமயம், ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா என்ற 3 மாவட்டத்திற்கு நடுவில் இந்த மலை மாவட்டம் உள்ளதால், அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது.. எந்த மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு யார் வந்தாலும் சரி, அவர்கள் 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா நெகட்டிவ் சர்ட்டிபிகேட் இருக்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யா கறாராக உத்தரவு போட்டுள்ளார்.. ஆக மொத்தம், 3வது அலை பரவிவிடாதவாறு, தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளது "கொங்கு"..!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications