மீண்டும் கோயம்பேடு ரெடி.. திருவண்ணாமலைக்கு போறீங்களா? இதோ சென்னையில் "85" தரும் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது திருவண்ணாமலை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை, பொதுமக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், எப்போதுமே வார இறுதி நாட்களில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும்.. இப்போது கோடை விடுமுறை என்பதால், பொதுப்போக்குவரத்துகளில் நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.

கோடை விடுமுறை: அதனால், பயணிகளின் வசதிக்காகவே தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் சுபமுகூர்த்த நாட்களும் வருகிறது.
எனவே, நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்தவகையில், நேற்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..
குட்நியூஸ்: இந்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வந்துள்ளது.. அதாவது, திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருகிறார்கள்.. இவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையை விடுத்தவாறே இருந்தனர்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதுடன், அதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு: இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 மொத்தம் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications