Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பாஜக எத்தனை எம்பி தொகுதிகளில் போட்டி.. நான் போட்டியிடுகிறேனா.. குஷ்பு பரபரப்பு பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கும் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலை போல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் வியூகம் வகுத்து வருகிறது.

Kushboo says that whether she is contesting in loksabha elections or not?

இந்த நிலையில் ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்திருந்தார். அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

இந்த நிலையில் காலை கிண்டி ஹோட்டலில் அவர் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து கோவிலம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்தார். இந்த கூட்டத்தில் குஷ்பு, எச் ராஜா, நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எச் ராஜா பேசுகையில் அன்று அமித்ஷா வரும் போது கருப்பு பலூன் விட்டார்கள். இன்று கரென்ட்டை கட் செய்துள்ளார்கள்.

இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்கே இந்த நிலை. சாதாரணமாக மின் வெட்டு நடப்பது சகஜம்தான். ஆனால் அமித்ஷா வருகிறார் என தெரிந்தும் மின்வெட்டு நடந்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. தமிழகத்திற்கு அமித்ஷா வருகைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் வருகை குறித்து குஷ்பு கூறுகையில், தமிழகத்திற்கு அமித்ஷா வருகை தந்துள்ளது எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறாரே. இது வரை இவர் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்.

Kushboo says that whether she is contesting in loksabha elections or not?

மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றையே ஸ்டாலின் செயல்படுத்துகிறார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 5000 கொடுத்துள்ளோம். இதை நாங்கள் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்கவில்லையா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் போய் சேர வேண்டும்.

ஒரு வேளை அந்த திட்டம் போய் சேரவில்லை என்றால் ஏன் சேரவில்லை என்பதை முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அமித்ஷாவின் வருகை தேர்தலில் எதிரொலிக்கும். கூட்டணி கட்சியில் இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்க்க தனியே சில வியூகங்களை வகுக்கத்தான் வேண்டும். அதைதான் இன்று செய்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. நான் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை எல்லாம் கட்சித் தலைமை சொல்லும். நான் சொல்ல முடியாது. அது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+