இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட்.. தனிமனிதனை பிரதிபலிக்கும் பட்ஜெட்.. பாஜக எல் முருகன் கருத்து
சென்னை: இந்த பட்ஜெட் இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட் தமிழக பாஜக தலைவர் L. முருகன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு பெற உள்ள கூடைப்பந்து வீராங்கனை அனிதாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இந்த தேசத்தின் வளர்ச்சியையும் ஒவ்வொரு தனி மனிதனை பற்றியேயும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கிறது. தமிழகத்திற்கு மிக முக்கியமான வளர்ச்சி திட்டங்களை கெடுக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு 1.65 கோடி ரூபாய் கடன் அறிவித்துள்ளது.
மோடி அரசின் மோசடி பட்ஜெட்.. பொதுத் துறையை தாரை வார்ப்பதுதான் சுய சார்பு இந்தியாவா?.. வேல்முருகன்
துறைமுகம்
அது போல மீனவர்களுக்கு மிகப்பெரிய துறைமுகம் சென்னையில் வர இருக்கிறது. மேலும் கடல் பாசி பதப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வசதிகள் ஏற்படுத்த உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1 லட்சத்து 3000 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
8 வழி சாலை சென்னை முதல் சேலம் வரை மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் வேலை வாயப்பு உருவாகும் அதனால் மிகப் பெரிய வளர்ச்சி அடையும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு மேல் படிப்பு படிக்க ஊக்க தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்
அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கிறது. தேர்தலுக்காக நிதி அதிமாக ஒதுக்கவில்லை கடந்த வருட பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது அதை போலவே இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதிக்கியுள்ளனர். 8 வழிச் சாலையில் சுப்ரீம் கோர்டு தீர்ப்பு வழங்கியது.
யார் பங்கேற்பு?
அதில் தமிழக கொண்டு வந்துள்ள திட்டத்தை நிறைவெற்றலாம் அதில் தடையில்லை என தெரிவித்துள்ளது. உடன் பாஜக மாநில துணைத்தலைவர் எம் என் ராஜன், பாஜக செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் , சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்தியன் உட்பட பலர் உடனிருந்தனர்.