ஷாக்! கர்நாடகா திறக்கும் தண்ணீர் காவிரியில் மாயம்! ஏமாறும் தமிழகம்? பகீர் தகவல்! அரசு கவனிக்குமா
சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் கர்நாடகா திறந்து விடும் தண்ணீரின் அளவை விட குறைவாகவே தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு நீர் கிடைக்கிறது. இதனால் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கி்ல இடையில் பிற பயன்பாட்டுக்கு காவிரி நீர் திருடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் தமிழக அரசு விசாரிப்பது அவசியம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் தருவது இல்லை. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது. அப்போது கர்நாடகா அரசு சார்பில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதைடுத்து உரிய முறையில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகா அரசோ மழை குறைந்துள்ளதால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி குறைந்த அளவில் மட்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறது. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் மீண்டும் காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக இருமாநிலங்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதன்பிறகு மதியம் 1 மணிக்கு மேல் ஒகேனக்கலில் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதுஒருபுறம் இருக்க தற்போது காவிரி நீர் விவகாரத்தில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடுவதாக கூறும் தண்ணீரின் அளவுக்கும், தமிழ்நாட்டுக்கும் வரும் தண்ணீரின் அளவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதாவது கர்நாடகா அரசு திறந்து விடும் தண்ணீர் மிக குறைந்த அளவில் மட்டுமே தமிழகத்துக்கு வரும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகா 86.38 டிஎம்சி தண்ணீர் திறந்து வேண்டி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தமிழ்நாட்டிக்கு குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட பயிர்கள் கருகும் சூழல் உருவாகி உள்ளன.
மேலும் கர்நாடகா அரசு திறந்து விடுவதாக கூறும் தண்ணீரின் அளவுக்கும், தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கர்நாடகா கூறும் அளவை விட தமிழகத்துக்கு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதாவது ஆகஸ்ட் 5ல் கர்நாடகா சார்பில் காவிரியில் 10,308 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 5,573 கனஅடி நீர் மட்டுமே வந்தது. மேட்டூருக்கு 299 கனஅடி நீர் மட்டுமே கிடைத்தது.

அதேபோல் ஆகஸ்ட் 10ல் கர்நாடகாவில் இருந்து 10,301 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பிலிகுண்டுலுவுக்கு 6,853 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் மேட்டூருக்கு 5,026 கனஅடி நீர் மட்டுமே வந்துள்ளது. மேலும் நேற்று கர்நாடகா சார்பில் 13,290 கனஅடி நீர் திறந்து விட்டது. ஆனால் இன்று காலையில் பிலிகுண்டுலுவுக்கு 3,500 கனஅடி நீர், மேட்டூருக்கு 1,478 கனஅடி நீர் மட்டுமே வந்திருந்தது.
இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் இடையிடையே வேறு குடிநீர், பாசன திட்டங்களுக்கு உறிஞ்சப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் இந்த பிரச்சனையை அறிந்து கொண்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்து விடும் தண்ணீர் பிலிகுண்டுலுவுக்கு வரும் வழியில் எப்படி குறைகிறது? என்பதை அறிய தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications