நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை... மனமுடைந்து போன அமைச்சர் சி.வி.சண்முகம்
Recommended Video
சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது சகோதரி மகன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இருந்து மீளமுடியாமல் மனமுடைந்து போய்விட்டாராம்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் சி.வி.சண்முகம். அரசியல் அதிரடிகளுக்கு பெயர்போனவர், யாருக்கும் அஞ்சாதவர், மனதில்பட்டதை அக்கம்பக்கம் பார்க்காமல் உரக்க கூறுபவர் என அவரை பற்றி பெருமிதம் தெரிவிக்கிறார் அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரி மகன் தற்கொலை செய்துகொண்டது சி.வி.சண்முகத்தை உலுக்கிவிட்டதாம்.

சொந்த மகனை போல் சகோதரி மகன் லோகேஷை வளர்த்து வந்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். படிப்பதற்கு ஆஸ்திரேலியா எல்லாம் அனுப்பி வைத்தார், மறைந்த தனது சகோதரி இல்லாத குறையை தாமே தாயாக நின்று கவனித்தார் சண்முகம். இப்படி பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட அந்த லோகேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டது அமைச்சர் சண்முகத்தை மட்டுமல்லால் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் நிலை குலைய செய்துள்ளது.
அண்மையில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் மகன் விபத்தில் சிக்கி மிக கடுமையாக பாதிக்கப்பட்டார். காலில் பலத்த அடிபட்டதில் எலும்புகள் நொறுங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சகோதரி மகனும் தவறான முடிவை எடுத்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இப்படி பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தொடரும் துயர நிகழ்வுகளால் கடந்த 4 நாட்களாகவே அமைச்சர் சி.வி.சண்முகம் யாரிடமும் பேசாமல் மிகுந்த இறுக்கத்துடன் இருப்பதாகவும், மனமுடைந்து அழுததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டத்தில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications