அப்போ துர்கா ஸ்டாலின்.. இப்போ ஸ்ட்ரைட்டா ஜனாதிபதி.. லதா ரஜினிகாந்த் எங்கையோ போயிட்டாரே
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் டெல்லி புறப்படும் முன்பாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலை சென்னை வந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். பின்பு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.

இதனையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி, கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பிறகு அவர் டெல்லி திரும்பும் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார் லதா ரஜினிகாந்த். அப்போது பிரபல நடிகர் ஒய்.ஜி மஹேந்திரன், மூத்த நடிகை டாக்டர் வைஜந்தி மாலா உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர். மற்றும் ஜேப்பியார் குழும நிறுவனங்களின் தலைவர் ரெஜினா முரளி அவர்களும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி கொலு பூஜையில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகைகள் மீனா, லதா உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டனர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பூஜையில் பங்கேற்றனர். ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருப்பதால், அவர் பூஜையில் பங்கேற்கவில்லை. ரஜினிகாந்தின் மனைவி, மகள்கள், பேரன்கள் பூஜைக்கு வந்தவர்களை வரவேற்றனர். அரசியல் பாகுபாடு இன்றி அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் லதா ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது சென்னை வந்த குடியரசுத்தலைவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளார் லதா ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications