உடல் வேறு.. கால் வேறாக.. லிஃப்ட்டில் சிக்கி 2 துண்டான பிரபல ஸ்டார் ஹோட்டல் ஊழியர்.. சென்னையில் ஷாக்!
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் லிஃப்டில் சிக்கி ஹோட்டல் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ரூம் சர்வீஸ் பாயாக பணியாற்றி வரும் ஊழியர் அபிஷேக். இவர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இன்று அபிஷேக், அந்த ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் லிஃப்டில் செல்லும் போது, கதவு முழுவதும் மூடாமல் லிஃப்ட் கீழே இறங்கியுள்ளது.

இதனால், ஹோட்டல் ஊழியர் அபிஷேக் உடல் இரண்டாக துண்டிக்கப்பட்டு பலியானார். கதவு முழுமையாக மூடாமல் சென்ற நிலையில், ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளுக்கு இடையே சிக்கி தூய்மை பணியாளர் அபிஷேக்கின் உடல் துண்டானது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வீஸ் லிஃப்டில் இந்த விபத்து நடந்தது தெரியாமல் இருந்தது. நீண்ட நேரமாக சர்வீஸ் லிஃப்ட் கீழே வராத காரணத்தினால் சோதித்துப் பார்த்தபோது இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிர்ந்து போன ஹோட்டல் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. இதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் லிப்ஃடில் எவ்வாறு அபிஷேக் சிக்கி உயிரிழந்தார் என்பது குறித்தும், ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications