காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு
Recommended Video
சென்னை: சென்னையில் காலை முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசிவருவதால் இதமான குளிர் நிலவுகிறது. இந்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
கோடைக்காலத்து மேகங்கள் சுத்தமாக எட்டிபார்க்காததால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் கார் காலத்தை கடந்த 6 மாதங்களாக கண்ணிலேயே பார்க்கவில்லை. இதனால் சென்னை மக்களை வெயில் சுட்டெரித்து வாட்டி வைத்தது. இது ஒருபுறம் எனில் 6 மாதமாக மழை விழுகாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போயின. இதனால் தண்ணீரே இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் தான் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது. இந்த மழையை கண்டு சென்னை வாசிகள் மிகுந்த சந்தோஷப்பட்டனர். ப6ல நாள் பட்டினியில் கிடந்தவருக்கு பிரியாணி கிடைத்ததைப் போல் உணர்ந்து மக்கள் அன்றைக்கு மழையை அனுபவித்தனர். சென்னை மழை நேஷனல் டிரெண்டிங் ஆனது.
இந்த சந்தோஷம் இன்றும் கிடைத்துள்ளது சென்னை மக்களுக்கு.. ஆம்.. காலையில் இருந்தே ஊதக்காற்று அடித்துக்கொண்டிருந்தது. பின்னர் மேகங்கள் கூட்டமாகி மெல்லிய மழைச் சாரலை, திருப்பித்தருவேன் என்ற உத்தரவாதத்தோடு வங்ககடலிடம் இருந்து கடன் வாங்கி வந்து கொட்டிச் சென்றன.
இதன் காரணமாக சென்னையில், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, வில்லிவாக்கம் அண்ணாநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனிடையே வங்கக்கடலில் வளிமண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் குறைந்து மாலை அல்லது நள்ளிரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications