Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்ல அத்தை.. பிறகுதான் சித்தி.. இது அவருக்கு பிடிக்கலை.. அதான் சரமாரியா.. மிரள வைத்த கணேசன்!

சென்னையில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முதல்ல என் அத்தையுடன்தான் எனக்கு உறவு இருந்தது.. அப்பறம்தான் சித்தியுடன் தொடர்பில் இருந்தேன்.. இது என் அத்தைக்கு பிடிக்காமல் என்னை கண்டிக்கவும், நான் அவரை கத்தியால் குத்திவிட்டேன்" என்று போலீசாரே மிரண்டு போகும் அளவுக்கு இளைஞர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.

Recommended Video

    Chennai Kolathur Lockdown Crime

    சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன்.. இவருடைய மனைவி குணசுந்தரி.. 37 வயதாகிறது.. இவருடைய தம்பி லோகு என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன்.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் கொளத்தூரில் வசித்து வருகிறார்.. ஆனால் மனைவி இவருடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

    மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில்,தான், கணேசனுக்கும், லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.. அதாவது லோகுவின் மனைவி கணேசனுக்கு சித்தி முறை ஆகிறது. 5 மாதமாக இருவரும் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

    குணசுந்தரி

    குணசுந்தரி

    தன்னுடைய தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் இப்படி முறைதவறி நடப்பதை கண்டு அதிர்ந்தார் குணசுந்தரி.. அதனால் இந்த உறவை விட்டுவிடும்படி கணேசனை கண்டித்தார்... ஆனாலும் அவர் கேட்கவில்லை.. ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, கணேசன் வீட்டுக்கு சென்று உறவை கைவிடும்படி திரும்பவும் சொல்லவும் இவர்களுக்குள் தகராறு வெடித்தது.

    உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    பொறுமை இழந்த கணேசன், ஒரு கத்தியை எடுத்து வந்து அத்தையை சரமாரியாக குத்தினார்.. உடம்பெல்லாம் கத்தி குத்து விழுந்த நிலையில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார் குணசுந்தரி. இதை பார்த்ததும் கணேசன் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த கொளத்தூர் போலீசார், தப்பி ஓடிய கணேசனை தேடி வந்த நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொண்டமல்லி கிராமத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்தனர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    பிறகு சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர். கணேசன் சொன்னதாவது: "முதலில் எனக்கும் என் அத்தை குண சுந்தரிக்கும்தான் தவறான உறவு இருந்தது.. அத்தைக்கு கல்யாணம் ஆனதும், நான் ஒதுங்கிட்டேன்.. அதனால என் சித்தியோட தொடர்பு வெச்சிக்கிட்டேன்.. நாங்க 2 பேரும் தனியா ஒரு வீடு எடுத்து அங்க தங்கியிருந்தோம்.. இதுவும் என் அத்தைக்கு பிடிக்கல..அதனால எனக்கு தொந்தரவு தந்துட்டே இருந்தாங்க.

    விசாரணை

    விசாரணை

    நாங்க நெருங்கி பழகியபோது அத்தை எனக்கு பண உதவி நிறைய பண்ணாங்க. அந்த பணத்தை இப்போ திரும்ப கேட்டு தொல்லை தர ஆரம்பிச்சாங்க.. இது சம்பந்தமாகத்தான் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தகராறு வந்தது.. சித்தியுடன் உறவு வெக்க கூடாதுன்னு பிரச்சனை பண்ணாங்க.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை பண்ணிட்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டேன்" என்றார். இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் என்றாலும், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் சென்னைவாசிகளை விட்டுபோகவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+