புதிய தளர்வுகளுடன்.. தமிழகத்தில் லாக்டவுன்.. ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் ஆகஸ்ட் இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்த முறை கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டவுன் இதுவரை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக அமலில் இருக்கிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மீண்டும் ஒரு மாதத்திற்கு தொடரும் என கூறப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை(லாக்டவுனை ) ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தியேட்டர்கள்

சினிமா தியேட்டர்கள்

என்ன மாதிரியான தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி புதன்கிழமை மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கலந்துரையாடும் போது தெரியவரும். ​​பொது போக்குவரத்து மற்றும் மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் மீதான தடை நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

சில தளர்வுகள் வரும்

சில தளர்வுகள் வரும்

இது தொடர்பாக மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டங்களில் கோவிட் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதைய லாக்டவுன் ஜூலை 31ம் தேதி முடிவுக்கு வந்தாலும், தொடர்ந்து நீட்டிக்கப்படலாம். இன்னும் சில தளர்வுகள் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும் "என்று கூறினார்.

முதல்வர் தொடங்கி வைப்பு

முதல்வர் தொடங்கி வைப்பு

இதனிடையே இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 தொழில்துறை திட்டங்களின் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கி வைக்க உள்ளார். 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, மேலும் எட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த திட்டங்களில் டிபிஐ காம்போசைட்ஸ், காற்றாலை ஆலைகளுக்கு றெக்கைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் மற்றும் பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கேபிடாலண்ட் (முன்பு அசெண்டாஸ்) 2.2 மில்லியன் சதுர அடி ஐடி பூங்கா மற்றும் வளைகுடா எண்ணெயால் நிறுவப்பட்ட உற்பத்தி அலகு ஆகியவை தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரகடத்தில்

ஒரகடத்தில்

ஒரகடம் அருகே ரூ .250 கோடி ஏரோ ஹப் திட்டத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இது 5.5 லட்சம் சதுர அடி‘ பிளக் அண்ட் ப்ளே (' plug and play' ) வசதியாக இருக்கும், இது அரசுக்கு சொந்தமான டிட்கோ மற்றும் டைடல் பார்க் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்படுகிறது. இந்த வசதிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வான்வெளி துறையினரின் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய உதவும் "என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+