சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்திலும் பிரச்சனை.. ஈவிஎம்களில் கோளாறு.. என்ன நடக்கிறது?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.
Recommended Video
சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.
இன்று லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள்.

ஆந்திரா தேர்தல்
ஆந்திராவில் தேர்தல் நடந்த போது மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது. பல முக்கிய இடங்களில் இந்த பிரச்சனை நடந்தது. ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.

இயந்திரங்கள் கோளாறு
அதேபோல் இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் வாக்களித்தால் , யாருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவிற்கு செல்கிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இது தொடர்பாக அவர் திமுக தலைவர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார். பிற மாநில தேர்தலிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ள்ளது என்று அவர் கூறி இருந்தார்.

பெரிய பிரச்சனை
இதோ அவர் எச்சரித்தது போலவே தற்போது பெரிய அளவில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாமல் போய் இருக்கிறது. முக்கியமான தொகுதிகள் பலவற்றில் இன்னும் வாக்குபதிவே தொடங்காத நிலை ஏற்பட்டு இருப்பதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அச்சம்
இது மக்களிடையே கோபத்தை உண்டாக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் இப்படி வேலை செய்யாமல் போகிறது. இந்த பழுதுக்கு காரணம் என்ன. இதன் பின் சந்திரபாபு நாயுடு சொன்னது போல ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று பல கேள்விகளை மக்கள் எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications