‛மீண்டும் கோவை கிடையாது’.. வேறு தொகுதியை கேளுங்க! கறாராக கூறிய திமுக.. வருத்தத்தில் மா.கம்யூனிஸ்ட்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதி தான் தருவோம். அதிலும் கோவை தொகுதி கிடையாது. அதற்கு பதில் வேறு தொகுதியை கேளுங்கள் என திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூறியதால் இன்று நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த 4ம் தேதி திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறை மதுரை, கோவை உள்பட இன்னொரு தொகுதி என 3 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது.
ஆனால் திமுக தொகுதி பங்கீட்டு குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து மீண்டும் இன்று 2வது கட்டமாக சென்னை அண்ணா அறிவலாயத்தில் 2 கட்சிக தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினர். இன்றைய தினம் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது 2 தொகுதிகளை திமுக வழங்குவதாக கூறியுள்ளது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓகே கூறியுள்ளது. அதேவேளையில் கடந்த 2019 தேர்தல் போலவே மீண்டும் மதுரை, கோவை தொகுதிகளை தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ கோவை தொகுதியை இந்த முறை வழங்க முடியாது. மதுரை தொகுதியை வழங்குகிறோம். கோவைக்கு பதிலாக வேறு தொகுதியை கேளுங்கள் என உறுதியாக கூறியுள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்படவில்லை. கடந்த முறை கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அந்த தொகுதியை இந்த முறை விட்டு கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. இதனால் இன்றைய தினம் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நடந்த 2 ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் அடுத்தக்கட்டமாக விரைவில் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் கோவை தொகுதியை மீண்டும் ஒருமுறை கேட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. ஒருவேளை திமுக கோவை தொகுதியை மீண்டும் தர மறுத்தால் மயிலாடுதுறை, நாகை தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications