ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நிகழ்ச்சி… விசாரணை நடத்த உத்தரவு
சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார் . ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், அரசியல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்ட குளறுபடிகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் குறித்து ராகுல் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து ராகுல் காந்தி நாகர்கோவிலில் நடந்த கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் ராகுல் காந்தி நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடத்த அனுமதி அளித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மண்டல இயக்குனர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசை உடனே அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இல்லை என்றும் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ராகுல் உரையாற்றியதற்கு ஆட்சேபனை செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications