மேகதாதுவிற்காக கோஷம்.. லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக, திமுக எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை: லோக்சபாவில் இருந்து, தம்பிதுரை மற்றும் வேணுகோபால் தவிர்த்த அதிமுக எம்பிக்கள் அனைவரும் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப் படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபாவில் அதிமுகவுக்கு மொத்தம் 37 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் ஏழு பேரும், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் 5 பேரும் இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இன்று பலமுறை அவையை ஒத்தி வைத்தார் ராஜ்யசபா தலைவர்.
லோக்சபாவிலும் அதிமுக எம்பிக்கள், மேகதாது விவகாரத்திற்காக தொடர்ந்து கோஷமிட்டனர். நாடாளுமன்றம் கூடியது முதலே இவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் நடவடிக்கை பாதிக்கப்படுவதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல முறை எச்சரித்தும் எம்.பி.க்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சஸ்பெண்ட் நடவடிக்கை அரிதானது ஆகும். இதனிடையே, சபாநாயகர் நடவடிக்கை அநீதியானது என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications