கனவுகள் மெய்ப்பட வேண்டும்.. உங்கள் விரலில் மை பட வேண்டும்.. கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை: புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள் என உறுதியளித்தார்.
காலம் மாறிவிட்டது; நகரம் மாறிவிட்டது, நீங்கள் மாறாமல் இருக்கிறீர்கள் என்று கூறிய கமல்ஹாசன், புரட்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.
கதிர்ஆனந்தின் வெற்றி வாய்ப்பை திசை திருப்பவே ரெய்டு.. ஏன் கடந்த மாதம் நடத்தியிருக்கலாமே- துரைமுருகன்
அந்தப் புரட்சியின் வெற்றி உங்கள் கையில் உள்ளது. நமது கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் உங்கள் விரலில் மை பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.