Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட போங்கப்பா.. எத்தனையாவது முறை ரெய்டுனு மறந்தே போய்விட்டேன்.. கார்த்தி சிதம்பரம் நக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றர்.

    சென்னை, டெல்லி, மும்பை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

     கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    அதேநேரம் எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 2010-14க்கு இடையில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதாக கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

     வழக்குப்பதிவு

    வழக்குப்பதிவு

    முன்னதாக, சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணை முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தான் சிபிஐ இப்போது ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் குறிப்பாக எந்த வழக்கு தொடர்பாக ரெய்டு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

     கார்த்தி சிதம்பரம் ட்வீட்

    கார்த்தி சிதம்பரம் ட்வீட்

    இதனிடையே சிபிஐ சோதனையை நக்கலடிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். சிபிஐ தனது இருப்பிடங்களில் எத்தனையாவது முறையாகச் சோதனை நடத்துகிறது என்பதையே மறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், "எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நான் மறந்தே விட்டேன். இது (சோதனை) கண்டிப்பாக புதிய சாதனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

     அதிரடி ரெய்டு

    அதிரடி ரெய்டு

    டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+