சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை.. வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கில் 250 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இது சென்னையை நோக்கி அதாவது கரையை நோக்கி மணிக்கு 20கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்க உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது நள்ளிரவு வரை தீவிரமடையக் கூடும். இதனால் சென்னை மற்றும் வடதமிழகத்தில் கனமழை கொட்ட வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.












Click it and Unblock the Notifications