Tirupati: திருப்பதியில் எதிரொலிக்கும் ஈரான் போர்! பக்தர்கள் கடும் அவதி!
திருப்பதி: நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்குமா? அங்கு என்னென்ன பிரச்சனை என்பதை பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன; அதேபோல் பல உணவகங்களில் உணவுப் பட்டியல்களும் சுருக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
சில நாட்களில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவது வழக்கம். இந்த சிரமத்தைப் போக்க, உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலை கோயிலுக்கு வெளியில் உணவு கிடைப்பதில் பெரும் சவாலை ஏற்படுத்துகிறது.
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. கோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்ட துரித உணவு நிலையங்கள் எரிவாயு விநியோகப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இது பக்தர்களை நேரடியாகப் பாதிக்கிறது; குறிப்பாக, குடும்பத்துடன் வரும் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உணவு கிடைப்பதில் கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர். நீண்ட காத்திருப்பு, உணவு இல்லாமை போன்ற சோதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்தச் சிக்கலைத் தீர்க்க அதிகாரிகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வந்தாலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. எரிவாயு விநியோகத்தை உடனடியாக மீட்டெடுத்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என உள்ளூர் மக்களும் பக்தர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாக கோடை காலத்தில் திருப்பதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி பக்தர்கள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்படும். ஆனால் இந்த முறை எரிவாயு பிரச்சினையால் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கவலைக்குரியதாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications