Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tirupati: திருப்பதியில் எதிரொலிக்கும் ஈரான் போர்! பக்தர்கள் கடும் அவதி!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்குமா? அங்கு என்னென்ன பிரச்சனை என்பதை பார்க்கலாம்.

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன; அதேபோல் பல உணவகங்களில் உணவுப் பட்டியல்களும் சுருக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

LPG Shortage in tirumala tirupathi temple

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

சில நாட்களில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவது வழக்கம். இந்த சிரமத்தைப் போக்க, உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலை கோயிலுக்கு வெளியில் உணவு கிடைப்பதில் பெரும் சவாலை ஏற்படுத்துகிறது.

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. கோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்ட துரித உணவு நிலையங்கள் எரிவாயு விநியோகப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இது பக்தர்களை நேரடியாகப் பாதிக்கிறது; குறிப்பாக, குடும்பத்துடன் வரும் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உணவு கிடைப்பதில் கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர். நீண்ட காத்திருப்பு, உணவு இல்லாமை போன்ற சோதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சிக்கலைத் தீர்க்க அதிகாரிகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வந்தாலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. எரிவாயு விநியோகத்தை உடனடியாக மீட்டெடுத்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என உள்ளூர் மக்களும் பக்தர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுவாக கோடை காலத்தில் திருப்பதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி பக்தர்கள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்படும். ஆனால் இந்த முறை எரிவாயு பிரச்சினையால் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கவலைக்குரியதாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+