கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல்.. என் காதலா..காதல் வயது பார்க்குமா? 6-வது பாடல் வெளியீடு
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பில் என் காதலா! காதல் வயது பார்க்குமா? என்ற 6-வது பாடல் இன்று வெளியிடப்பட்டது.
கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் பாடல் ஏப்ரல் 18-ந் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இன்று 6-வது பாடல் என் காதலா! காதல் வயது பார்க்குமா? வெளியிடப்பட்டது.

வைரமுத்துவின் பாடல் வரிகள்:
என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும்
சின்னக் கன்று என்று இன்று
சிந்தை மாறுமா?
வயதால் நம்
வாழ்வு முறியுமா?
வாய் முத்தம்
வயது அறியுமா?
நிலா வெண்ணிலா
வயதில் மூத்ததில்லையா
இருந்தும்
நிலவு சொல்லி இளைய அல்லி
மலர்வதில்லையா?
என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே!
ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்ன்பது
காலம் தோறும் மாறுது
வெட்டுக்கிளியின் ரத்தமோ
வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே
விதிவிலக்கும் உள்ளது
ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?
காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!
அறிவழிந்து போனபின்
வயதுவந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?
அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலே
அறமிருக்கும் இல்லையா?
ஏ.எல். விஜய் இயக்கத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையில் ஶ்ரீநிஷா குரலில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications