அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை
முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தற்போதுதான் கொஞ்சம் அடங்கி உள்ளது. இன்னும் சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடந்தது. வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின் அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இவர்களுடன் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். நீண்ட நாட்களுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று இருக்கிறார். கடைசியாக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பின் போது ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications