பெஞ்சல் புயலால் மெரினாவில் மின்கசிவு! பொய் செய்தி பரப்பியதாக அதிமுக நிர்மல்குமாருக்கு முன்ஜாமீன்
சென்னை: சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது, சென்னை மெரினாவில் மழை நீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக நிர்மல் குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நிர்மல் குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நிர்மல்குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஒரு வாரத்திற்கு சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications