அவதூறு வழக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை.. ஸ்டாலின் மீதான 4 வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் அவதூறு வழக்குகளைப் போடும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது 4 அவதூறு வழக்குகள், தமிழக அரசால் போடப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை நீதிபதி என். சதீஷ்குமார் நேற்று விசாரித்தார். இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் அவதூறு வழக்கு தொடர்பான தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில்தான் அரசியல் காரணங்களுக்கான அவதூறு வழக்குகள் அதிகமாக போடப்படுகின்றன. இந்த கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் நீதிபதி சதீஷ்குமார். மேலும், பொதுவாழ்க்கையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். நியாயப்பூர்வமான விமர்சங்களை எதிர்கொள்ள வேண்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக பிறரது மனம் புண்படும்படியான விமர்சனங்களை தவிர்க்கவும் வேண்டும் என்றார் நீதிபதி சதீஷ்குமார்.
அத்துடன், 2015 சென்னை பெருவெள்ளம் போன்ற நிலை தற்போது ஏற்படவில்லை. இம்முறை தமிழக அரசின் செயல்பாடு பாராட்டப்பட்டு வருகிறது என்றும் நீதிபதி சதீஷ்குமார் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் மீதான 4 கிரிமினல் அவதூறு வழக்குகளை தற்போது ரத்து செய்வதாகவும் 12 வழக்குகள் அடுத்த வார விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications