மனோ தங்கராஜின் மனைவி மீதான வழக்கு.. ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் அஜிதா மனோ தங்கராஜ், நாகர்கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்ய சிங் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாகக் கூறி, நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். .
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், முன்னாள் திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜின் மனைவி அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications