விஜய் முதல்வரானதும் திருப்பம்.. 15 கோடி ரூபாய் மறைப்பு வழக்கை வாபஸ் பெற்ற மனுதாரர்
சென்னை: புலி திரைப்பட விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது 'புலி' திரைப்பட வருவாய் விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதிய மனுவின் பின்னணி
கோரிக்கை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம். ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், 'புலி' திரைப்பட வருமானத்தில் நிதி மோசடி மற்றும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விஜய் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்யவும், காவல்துறை FIR பதிவு செய்யவும் கோரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு: மார்ச் 18-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்குப் பதிவாளர் அலுவலகம் முதலில் எண் வழங்க மறுத்தது. பின்னர் ஏப்ரல் 8 அன்று, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாச்சாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இதற்கு எண் வழங்க உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
சர்ச்சையின் தொடக்கம் (2015 சோதனைகள்)
IT ரெய்டு: கடந்த 2015 செப்டம்பர் 30 அன்று விஜய் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
கணக்கில் வராத பணம்: 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸின் பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், விஜய்க்கு காசோலை மூலம் வழங்கிய ரூ.16 கோடி ஊதியம் தவிர, கூடுதலாக ரூ.4.93 கோடியை ரொக்கமாக வழங்கியது சோதனையில் தெரியவந்தது.
விஜய்யின் விளக்கம்: இது குறித்து வருமான வரித்துறை விசாரித்தபோது, தான் ரூ.5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்ட விஜய், அதற்கான வரியைச் செலுத்தச் சம்மதித்தார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் 'புலி' படத்திற்காகப் பெற்ற இந்தத் தொகையைத் தவிர வேறு எந்த கணக்கில் காட்டப்படாத வருமானமும் இல்லை என்றும் அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அபராதம் மற்றும் தள்ளுபடி: கணக்கில் காட்டாத வருவாய்க்காக விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்திற்கு எதிராக விஜய் தொடர்ந்த மனுவை, கடந்த 2026 பிப்ரவரி 6 அன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
மேல்முறையீடு: இத்தள்ளுபடிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக கோரினார். அதன்படி அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில் 15 கோடி ரூபாய் வரி மறைவு வழக்கு வாபஸ் பெறப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications