2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்.. சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த முக்கியமான உத்தரவு
சென்னை: நேரடி தேர்வு மூலமாக தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. உரிய இட ஒதுக்கீடு முறையை கடைப்பிடித்து அரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து வருகிறார்கள். இதில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களானது பிஃப்டி பிஃப்டி அடிப்படையில் அதாவது 50 சதவீதம் நேரடி தேர்வு முறையாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு முறையாகவும் நிரப்பப்படுகின்றன.

50 சதவீத நேரடி நியமனம்
அதாவது 50 சதவீத நேரடி நியமனத்தில், 2 சதவீத இடங்கள் ஆசிரியர்கள் அல்லாத (பள்ளிக்கூட) ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும். இதற்கிடையே தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வு நடத்தி, 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு பிறப்பிப்பதற்கான நடைமுறைகள் நடந்து வந்தன. அப்போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 'நேரடி நியமனத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய 2 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்காமல் 2,500 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கக் கூடாது'' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான 2 சதவீத இடத்தை நிரப்பாமல், 2,500 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே அரசு நியமித்து விட்டது
இதற்கிடையே, இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'ஏற்கனவே 2,500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக காத்திருக்கும் சூழலில், தனி நீதிபதி உத்தரவால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இடைக்கால தடை உத்தரவினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், 2,500 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''2,500 பேருக்கான பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன. 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் அல்லாத ஊியர்களில் தகுதியானவர்களை ஏற்கனவே அரசு நியமித்து விட்டது.
எந்த பாதிப்பும் வராது
தற்போது அந்த 2 சதவீத ஒதுக்கீட்டில் காலி இடம் இல்லை'' என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ''நேரடி நியமனங்களுக்கான 50 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று உரிய இட ஒதுக்கீடு முறையை கடை பிடித்து அரசு பணி நியமன ஆணைகள் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த நியமனத்தால், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே அவர்கள் இந்த பணி நியமனத்தில் தலையிட முடியாது. இவர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீடு குறித்து இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications