Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு குட்டு.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிமுக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதைத் தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தை மறைவிற்குப் பிறகு இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார்.

 உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த சட்டவிதிமீறுல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை 5வது எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டார். மேலும், இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரியிடமிருந்து விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

 பாதிக்கப்படக் கூடாது

பாதிக்கப்படக் கூடாது

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசு மற்றும் மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும் தற்போது பதவியில் உள்ள எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாகவும், அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

 நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் கேள்வி

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். அதனால், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

 முக்கிய உத்தரவு

முக்கிய உத்தரவு

இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளைத் தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+