சென்னை அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது.. புதிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
பணிமனைகளில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் "சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும்.

புகைப்பிடித்தல், மது அருந்திவிட்டு வரும் பணியாளர்களை பணிமனைக்குள் அனுமதிக்க கூடாது. உத்தரவை மீறி மது அருந்திவிட்டு வரும் பணியாளர்கள் மீது மேற்பார்வையாளர்கள், பாதுகாவலரின் புகாருடன் கிளை மேலாளரின் பரிந்துரையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அது போல் பணிமனைகளில் மேல்மாடிகள், பயன்படுத்தாத அறைகளை பூட்டி வைக்குமாறும் அந்த நெறிமுறையில் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications