கோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -சு.வெங்கடேசன்
சென்னை: கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு புதுபிப்பது தொடர்பாக நேற்று தாம் எழுதிய கடிதத்துக்கு இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு;
''நேற்று கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு பகிர்ந்து உடனடியாக
அத்திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ''
''இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. கோவிட் கள முன்வரிசைப் பணியாளர்க்கான காப்பீடு திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. அமைச்சருக்கு நன்றி.''
''ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. ஒன்று, இதற்கான பாலிசி 24.03.2021 அன்று முடிவடைந்து விட்டது. அன்றைய தினம் நள்ளிரவு வரை உயிரிழந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24.04.2021 க்குள்ளாக வரப் பெற்று உரிமப் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் இராஜேஷ் பூசன் அவர்களின் 24.03.2021 கடிதம் தெரிவிப்பது. ஆனால் அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி 24.04.2021 வரையில் இத் திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.''
''ஒரு முன் களப் பணியாளர்க்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய் விடக் கூடாது. அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கோரி இன்று மீண்டும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒரு வேளை காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான உரிமம் கிடைக்காவிடில் பி.எம் கேர் நிதி உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். கோவிட் போராளிகளின் குடும்பம் பரிதவிக்கிற நிலைமை வரக் கூடாது.''
''சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கோவிட் எதிர்ப்பு களத்தில் அரும் பணி ஆற்றுபவர்கள் எல்லோரும் காப்பீட்டுப் பயன் பெறுகிற வகையில் புதுப்பிக்கப்படுகிற திட்டம் இருக்க வேண்டும். அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.''
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications