காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!
மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திட்டங்களை மனதில் வைத்து சிவசேனாவை வேண்டும் என்றே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அலைய விடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திட்டங்களை மனதில் வைத்து சிவசேனாவை வேண்டும் என்றே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அலைய விடுவதாக கூறப்படுகிறது. சிவசேனாவை தனித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இப்படி செய்கிறது என்கிறார்கள்.
மகாராஷ்டிரா அரசியலில் பிரச்சனை இப்போதைக்கு முடியுமா என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் நழுவவிட்டுவிட்டது.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் இழுபறி நீடித்து வருகிறது.

அரசியல் வல்லுநர்கள்
இந்த நிலையில் சிவசேனா உடன் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் காலம் தாழ்த்த இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் பலர் சிவசேனா உடன் கூட்டணி வைக்க வேண்டாம். அது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நம்ப மாட்டார்கள்
மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். தேர்தலை சந்திக்கலாம். தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம் என்று கூறி உள்ளனர். சிவசேனாவிற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஓகே சொல்லாமல் இழுத்தடிக்க இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

அவசரம் வேண்டாம்
அதே சமயம் சோனியா காந்தி இன்னொரு விஷயத்திற்காகவும் சிவசேனாவிற்கு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். சிவசேனா உடன் இப்போது கூட்டணி வைத்தால் எப்படியும் எதிர்காலத்தில் முறிந்துவிடும். அதனால் அவசர பட வேண்டாம்.

முடிந்த வரை காத்திருப்பு
அதே போல் சிவசேனாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அவர்கள் மீண்டும் பாஜகவுடன் சமாதானம் ஆகி, ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கு வழி விட கூடாது. சிவசேனாவிற்கு இப்போது பதில் சொல்லாமல் முடிந்த அளவு காலம் தாழ்த்த வேண்டும். முடிந்த அளவு அவர்களை காத்திருக்க வைக்க வேண்டும்.

பாஜக கதவு
அவர்களுக்கு மொத்தமாக பாஜகவின் கதவு மூடிய பின்தான் நம்முடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் அக்கட்சியை அலையவிட்டு, பின் தனித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பிளான் போட்டுள்ளது.

ஆலோசனை
இதை பற்றித்தான் நேற்று சரத் பவார், சோனியா காந்தி இருவரும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கிறார்கள். இதனால்தான் சிவசேனாவிடம் ''பொறுத்திருங்கள், ஆலோசனை செய்கிறோம்'' என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

நன்மை
மகாராஷ்டிராவில் பாஜகவின் கதவு மொத்தமாக மூடப்பட்டால் சிவசேனா தனி கட்சியாக, வலிமை இல்லாத கட்சியாக மாறும். அதேபோல் பாஜகவும் சிவசேனா இல்லாமல் வலிமையை இழக்கும். இதனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பெரிய அளவில் பலன் அடையும், அதுதான் சோனியாவின் திட்டம் என்று கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications