நானே வாதாடிக் கொள்கிறேன்.. நீதிபதியிடம் சொன்ன மகாவிஷ்ணு! ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகியுள்ளார். மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். மேலும், வழக்கில் தானே வாதாடிக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு.

அண்மையில் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சொற்பொழிவை நடத்திய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மஹாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

mahavishnu chennai court

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மஹாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள மஹாவிஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு மகாவிஷ்ணு தரப்பு வழக்கு தாக்கல் செய்தது.

அதேநேரம் மகாவிஷ்ணுவை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சைதாப்பேட்டை போலீசாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நான்காவது அமர்வு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மகாவிஷ்ணுவின் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையும், போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி கோரியுள்ள மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார் மகாவிஷ்ணு. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், இந்த வழக்கில் தானே வாதாடிக் கொள்வதாகவும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு.

மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், வழக்கில் இருந்து விலகியுள்ளார். மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதாப்பேட்டை போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+