இரு துறைகளில் பெரிய நெருக்கடி.. பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.. ப.சிதம்பரம் எச்சரிக்கை
சென்னை: இரு துறைகளில் பெரிய நெருக்கடி நிலவுவதாகவும், இதே நிலை நீடித்தால், பல்லாயிரம், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும் என்றும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழில் தொடர்ச்சியான ட்வீட்டுகளை அவர் வெளியிட்டுள்ளார். ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரு துறைகள்
இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து. இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது.

பணிவு இல்லை
மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன்
மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை. இவ்வாறு தமிழில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

33 லட்சம்
கணிதம் எளிமையானது. ஆனால் பயமுறுத்துகிறது. இந்த விகிதத்தில் போனால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியா 30 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுநோய்களைப் பதிவு செய்யும். இதே மாதிரி தினசரி விகிதம் அதிகரித்தால், ஆகஸ்ட் இறுதிக்குள் 33 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும், 2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 55 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும் பதிவு செய்யும்.

தோல்வி
கடவுள் தடைசெய்தாலும், கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலக நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்க கூடும். பிரதமர் தனது கைகளில் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கிறார். கொரோனா தடுப்பு ஒரு முழு தோல்வி. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications