ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ.. என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்தது தான் - மல்லை சத்யா விளக்கம்
சென்னை: மதிமுகவில் இருந்து துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டு வைகோ அறிவித்துள்ளார். இந்நிலையில், தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், தனது மகன் குறித்து மட்டுமே வைகோ சிந்திப்பதாகவும், வைகோ ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கியப் பதவிக்கு வந்ததில் இருந்தும், வாரிசு அரசியல் குறித்தம் மல்லை சத்யா தொடர்ந்து விமர்சனங்களை செய்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், பொதுவெளியில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக பேசி வந்ததாக விளக்கம் கேட்டு கடந்த 17ஆம் தேதி மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கத்தை கடந்த வாரம் அவர் அளித்திருந்தார்.

இந்நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச் செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றும் மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications