Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை முகலிவாக்கத்தில் பெண் மீது கொலை வெறித் தாக்குதல்.. முடியை இழுத்து எட்டி உதைத்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முகலிவாக்கம் பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்த நபர், பெண் உரிமையாளரை சரிமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகலிவாக்கம் கிருஷ்ணவேணி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கணபதி ஜானகி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். கணபதி ஜானகி கடந்த 2013 ஆம் ஆண்டு முகலிவாக்கம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தார்.

man attacks a woman who runs working womens hostel at Mugalivakkam

இந்த விடுதியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் இவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவர் விடுதி நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

அவர் மீது நம்பிக்கை இருந்ததன் காரணமாக கணக்கு வழக்குகளையும் பரமசிவனிடம் கணபதி ஜானகி ஒப்படைத்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வரவு செலவு கணக்குகளில் ஏதோ பிரச்சினை இருப்பதை கணபதி ஜானகிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் மாதா மாதம் வாடகை கொடுப்பது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் நாங்கள் சரியாக கொடுத்துவிடுகிறோம். ஆனால் பரமசிவன் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியதால் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அந்த பெண்கள் கூறினர். இதுகுறித்து பரமசிவனிடம் கணபதி ஜானகி கேட்டதற்கு இந்த விடுதியை நான்தான் நடத்துகிறேன். ஏதாவது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கணபதி ஜானகி நேராக விடுதிக்கு சென்று பரமசிவனிடம் விசாரணை நடத்தினர். அதில் ஆத்திரமடைந்த பரமசிவன், கணபதி ஜானகியை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீஸில் கணபதி ஜானகி புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்தநிலையில்தான் பரமசிவன், கணபதி ஜானகியை தாக்கிய வீடியோ வெளியானது. அதில் பேசிக் கொண்டிருந்த போதே அந்த பெண் மீது பரமசிவன் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அவரை சிலர் தடுக்கிறார்கள். ஆனாலும் விடாமல் அடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருடைய அடி தாங்கமுடியாமல் அங்கிருந்த வெளியேற முயன்ற கணபதி ஜானகியின் முடியை பிடித்து இழுத்து எட்டி உதைத்து சோபாவில் தள்ளி தாக்குகிறார். நெஞ்சையே பதைபதைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பரமசிவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+