லுங்கியை கட்டி கொண்டே.. திடீரென லாரிக்கு அடியில் போய்.. போலீஸையே உறைய வைத்த நபர்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லுங்கியை கட்டி கொண்டே இருந்தவர், திடீரென லாரிக்கு அடியில் போய் தலையை வைத்து கொண்டார்.. இப்படி ஒரு சிசிடிவி காட்சியை பார்த்து போலீஸார் நடுநடுங்கி போய்விட்டனர்.

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் ஒருவர் ரோட்டை கிராஸ் பண்ண முயன்றார்.. அப்போது திடீரென லாரி மோதி அவர் இறந்துவிட்டார்.. இதனால், கோயம்பேடு போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. உடல் நசுங்கி கிடந்த அந்த சடலத்தையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Man committed suicide in front of Lorry near Chennai

பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. ஆனால் இறந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை.. அதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அந்த காட்சியை பார்த்து மிரண்டனர். அது விபத்தே இல்லை என்று தெரிந்தது.

இறந்து போன நபருக்கு 40 வயதிருக்கும்.. ரோட்டோரம் நின்று கொண்டிருக்கிறார்.. பிறகு தன்னுடைய லுங்கியை சரியாக கட்டுகிறார்.. இந்த பக்கமும், அந்த பக்கமும் செல்லும் வண்டிகளை நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறார்.. அங்கே ஒரு பெரிய லாரி வருகிறது.. அந்த லாரியை பார்த்ததுமே ரோட்டை கிராஸ் செய்து, அந்த லாரியின் டயர் முன்பு போய் படுத்து கொள்கிறார்.

வேகமாக வந்த அந்த லாரி, அவரது உடல், தலைமீது ஏறி இறங்கியது.. இதில் தலை நசுங்கி அங்கேயே அவர் இறந்துவிட்டார்.. இவ்வளவும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

ஆனால், அவர் யார் என்று தெரியவில்லை.. எதற்காக ஓடும் லாரியில் தலையை வைத்து கொண்டார் என்றும் தெரியவில்லை.. விசாரணை நடந்து வருகிறது.. இந்த சிசிடிவி காட்சிகள்தான் இணையத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+