அந்தரங்க அறையான ஆஸ்பத்திரி..அறைகுறை ஆடையுடன் சிக்கிய நபர்! கூட இருந்தது நர்ஸா? புகாரும்..விளக்கமும்!
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து படுக்கையறையாக பயன்படுத்தி வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில்," தினசரி நாளிதழ்கள் மற்றும் செய்தி சேனல்களில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக மாற்றி பயன்படுத்தி கொண்டிருப்பதாக செய்திகள் வரப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை கீழ் வருமாறு," கோயம்புத்தூர் மாநகராட்சி கடந்த 2011-12-ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது அப்போது வடவள்ளி பகுதி கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஊரக பகுதியில் செயல்பட்டு வந்த வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிட வசதி இல்லாததால் வடவள்ளி பெரியார் நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு அறை மட்டுமே கொண்ட கட்டிடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 14.02.2026 அன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது புகார் பெறப்பட்ட உள்ள கட்டிடம் தேசிய நகர்புற வளர்ச்சி நிதியின் கீழ் முதலில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. கட்டிடம் நான்கு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய கட்டிடமாக உள்ள நிலையில் கட்டிடம் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மே 2025 முதல் மேற்கண்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் திருமதி.கனிதா என்ற நகர்புற சுகாதார செவிலியர் குடியமர்த்தம் செய்யப்பட்டு திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் புதன் கிழமைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் சிறு உபாதைகளுக்கான சிகிச்சைகள் தினம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமதி கனிதாவின் கணவர் திரு ஷ்யாம் சுந்தர் பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டது.
அந்த துணை சுகாதார நிலையம் இன்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் திருமதி கனிதா மற்றும் அவரது கணவர் திருமதி. ஷ்யாம் சுந்தர் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருந்தனர். மேலும், அந்த துணை சுகாதார பகுதில் மேற்படி பொருட்களை பயன்டுத்தியதற்காக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலர் அவர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற நான்கு அறைகளில் இரண்டு அறைகள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்குமாறும் இரண்டு அறைகளை மட்டும் தங்குவதற்கும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரை துணை சுகாதார நிலையம் என மாற்றி எழுதவும், சிகிச்சை அறைகளுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர் எழுப்பவும் குடியிருப்பு பகுதிக்கு தனி வாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications