"கண்றாவி".. படிக்கட்டிலேயே நித்யாவுக்கு அட்டூழியம்.. பார்க்கிங்கில் அட்ராசிட்டி.. வெளியான வீடியோ
கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட பிரச்சனையால் பெண்ணுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது
சென்னை: ஒரு வீடியோ நேற்றில் இருந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து சென்னைவாசிகளே மிரண்டு போயுள்ளனர்.
சென்னை அடுத்த மாங்காடு, பத்மாவதி நகர் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது.. கார் பார்க்கிங் உட்பட சகல வசதிகளையும் கொண்டது இந்த அடுக்குமாடி குடியிருப்பு.
இங்கு வசித்து வருபவர் நித்யா.. 37 வயதாகிறது.. இதே குடியிருப்பின் மேல்வீட்டில் நித்யா தனியாக வசித்து வருகிறார்.

அப்பார்ட்மென்ட்
இவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்.. அந்த அபார்ட்மென்ட்டிலேயே இவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில், வேறு ஒருவர் பைக்கை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதை பார்த்ததும் நித்யா, சம்பந்தப்பட்டவரிடம் சென்று கேட்டுள்ளார்.. அதற்கு அவர், கீழ்தளத்தில் வசிக்கும் மோகன் என்பவர்தான், அங்கே தன்னுடைய பைக்கை நிறுத்த சொன்னதாக கூறியிருக்கிறார்... உடனே நித்யா, அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகனிடம் சென்று இதுகுறித்து கேட்டிருக்கிறார்..

டென்ஷன்
அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது... ஒருகட்டத்தில், மோகனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. பொறுமை இழந்த மோகன், நித்யா மீதிருந்த கோபத்தில், அங்கிருந்த இரும்பு கதவை பிடித்து தள்ளினார்.. அந்த கதவு, மோகனின் அம்மாவின் முகத்திலேயே பட்டு, காயம் ஏற்பட்டுவிட்டது.. அதை பார்த்தமும் இன்னும் டென்ஷன் ஆகிவிட்டார் மோகன்.. உடனே காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நித்யாவின் மீது சரமாரியாக அடித்தார்.. அதுவரை பொறுமையாக இருந்த நித்யா, பதிலுக்கு தன்னுடைய செருப்பை கழட்டி மோகனை அடித்துள்ளார்.

படிக்கட்டு
பிறகு, நித்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வந்தார் மோகன்.. உடனே நித்யா, மோகனை தன்னுடைய காலால் எட்டி எட்டி உதைத்தார்.. இவ்வளவு களேபரமும் ஒரே அப்பார்ட்மென்ட்டில், அந்த படிக்கட்டிலேயே நடந்தது.. யாராலுமே இவர்களை தடுக்க முடியவில்லை.. கடைசியில், குடியிருப்புவாசிகள் மொத்த பேரும், மாங்காடு போலீசுக்கு ஓடினார்கள்.. அங்கு சென்று புகார் தந்ததையடுத்து, போலீசார் விரைந்து வந்தனர்.

கார் பார்க்கிங்
மோகன், நித்யா இரு தரப்பினரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. விசாரணை நடத்தினர்... இன்னும் அந்த கார் பார்க்கிங் விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்றாலும், அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனிடையே, இவர்களுக்குள் நடந்த "செருப்படி சண்டை" வீடியோ சோஷியல் மீடியா முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன், அந்த படிக்கட்டில் ஏறி சென்று நித்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென கீழே இழுத்து வந்து தாக்கியதை பார்த்து இணையவாசிகள் அதிர்ந்து போய்விட்டனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications