காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்!
சென்னை: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்ற கண்டிப்பாக நானும் வருவேன் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான தேர்தல் பொறுப்புகளில் இருந்து மார்ச் 28ஆம் தேதியே விலகிவிட்டேன் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை. திமுக சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 28 தொகுதிகளால், காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் மையக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையிலேயே காரசார விவாதம் நடந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏ சீட் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்தும், ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பில் இருந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விலகி இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலால் எழுந்த அதிருப்தியே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் மாணிக்கம் தாகூர், ஒரு குழப்பம் தேவையில்லாமல் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தேர்தல் சம்மந்தப்பட்ட மாநில அளவிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கூறிவிட்டேன்.
மார்ச் 28ஆம் தேதி இதுதொடர்பாக கூறிவிட்டேன். அதனைப் பற்றி விவாதங்கள் தேவையில்லாதது. என்னை பொறுத்தரவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும். அதற்காக எம்பி என்ற முறையில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றுவேன். நாடாளுமன்ற கொறடா பணி முடிவடைந்த பின் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவேன்.
மதுரையின் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதியில் என் உழைப்பு தொடரும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி 6க்கு 6 தொகுதிகளிலும் வெற்றிபெற வைப்பதற்காக நானும் வந்து சேர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications