சசிகலா மத்தியஸ்தர்! மாமா மருமகன் இணைப்பு விரைவில்! ஒன்றுதிரளும் மன்னார்குடி உறவுகள்!
சென்னை: திவாகரனையும் தினகரனையும் இணைப்பதற்கான முயற்சிகளை மன்னார்குடி உறவுகள் சிலர் முன்னெடுத்து வருகிறார்களாம்.
இனியும் இப்படியே பிரிந்திருந்தால் அது நமக்கு தான் பாதகமாக முடியும் என்பதை அவர்கள் இரண்டு தரப்பிடமும் எடுத்துக் கூறுகிறார்களாம்.
இணைப்பு என்றால் அமமுகவை இணைப்பது என்று நினைத்துவிடாதீர்கள், குடும்ப ரீதியாக உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி தானாம் அது.

குடும்ப ஒற்றுமை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எவ்வாறு பிளவு வந்ததோ அதே போல் சசிகலா குடும்ப உறவுகள் மத்தியிலும் பிளவு வந்தது. மாமன் மருமகனான திவாகரனும் தினகரனும் ஒரு பக்கம் பிரிந்ததோடு அக்கா தம்பியான சசிகலாவும் திவாகரனும் பிரிந்தார்கள். இப்படி ஆளாளுக்கு பிரிந்து குடும்பத்தில் ஒற்றுமையில்லாததை நினைத்து சசிகலா ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார். இதையறிந்த மன்னார்குடி உறவினர்கள் சிலர் முதற்கட்டமாக சசிகலா -திவாகரன் இடையே இணைப்பு பாலமாக நின்று பேசி அக்காவையும் தம்பியையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

இணைக்க முயற்சி
இதன் காரணமாக தான், தாம் நடத்தி வந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவில் நேற்றைய தினம் இணைத்திருக்கிறார் திவாகரன். இனி அடுத்தப்படியாக திவாகரனையும் தினகரனையும் குடும்ப ரீதியாக இணைக்க முயற்சிகள் நடக்கிறதாம். திவாகரணுக்கு மூத்த அக்கா மகன் தான் தினகரன். தற்போதைய அரசியல் சூழலில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணர்ந்து இந்த இணைப்பு படலம் தொடங்கியிருக்கிறதாம்.

லேசான மன வருத்தம்
இதனிடையே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே கூட லேசான மன வருத்தம் இருப்பதால் அதனையும் சரி செய்ய குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் பேசி வருகிறார்களாம். இந்த முயற்சிகள் மட்டும் ஒர்க் அவுட் ஆகிவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு உற்சாகத்துடன் சசிகலா தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து மக்கள் சந்திப்பார் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

நடராஜன் இல்லை
சசிகலாவின் கணவர் நடராஜன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், குடும்ப உறவுகள் இந்தளவுக்கு பிரிந்து சென்றிருக்க விட்டிருக்கமாட்டார். உடனுக்குடன் பேசி முடித்து சுமூகமாக்கிவிடுவார். அந்த ஆற்றலும் திறமையும் அவருக்கு நிறையவே இருந்தது. அவர் இல்லாத குறை தான் இன்று சசிகலாவுக்குமே இவ்வளவு சிக்கல்கள் வந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜ தந்திரத்துடன் காய் நகர்த்தி பேச வேண்டிய இடத்தில் பேசி காரியம் சாதிப்பதில் மிகக் கெட்டிக்காரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications