சசிகலா மத்தியஸ்தர்! மாமா மருமகன் இணைப்பு விரைவில்! ஒன்றுதிரளும் மன்னார்குடி உறவுகள்!
சென்னை: திவாகரனையும் தினகரனையும் இணைப்பதற்கான முயற்சிகளை மன்னார்குடி உறவுகள் சிலர் முன்னெடுத்து வருகிறார்களாம்.
இனியும் இப்படியே பிரிந்திருந்தால் அது நமக்கு தான் பாதகமாக முடியும் என்பதை அவர்கள் இரண்டு தரப்பிடமும் எடுத்துக் கூறுகிறார்களாம்.
இணைப்பு என்றால் அமமுகவை இணைப்பது என்று நினைத்துவிடாதீர்கள், குடும்ப ரீதியாக உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி தானாம் அது.

குடும்ப ஒற்றுமை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எவ்வாறு பிளவு வந்ததோ அதே போல் சசிகலா குடும்ப உறவுகள் மத்தியிலும் பிளவு வந்தது. மாமன் மருமகனான திவாகரனும் தினகரனும் ஒரு பக்கம் பிரிந்ததோடு அக்கா தம்பியான சசிகலாவும் திவாகரனும் பிரிந்தார்கள். இப்படி ஆளாளுக்கு பிரிந்து குடும்பத்தில் ஒற்றுமையில்லாததை நினைத்து சசிகலா ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார். இதையறிந்த மன்னார்குடி உறவினர்கள் சிலர் முதற்கட்டமாக சசிகலா -திவாகரன் இடையே இணைப்பு பாலமாக நின்று பேசி அக்காவையும் தம்பியையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

இணைக்க முயற்சி
இதன் காரணமாக தான், தாம் நடத்தி வந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவில் நேற்றைய தினம் இணைத்திருக்கிறார் திவாகரன். இனி அடுத்தப்படியாக திவாகரனையும் தினகரனையும் குடும்ப ரீதியாக இணைக்க முயற்சிகள் நடக்கிறதாம். திவாகரணுக்கு மூத்த அக்கா மகன் தான் தினகரன். தற்போதைய அரசியல் சூழலில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணர்ந்து இந்த இணைப்பு படலம் தொடங்கியிருக்கிறதாம்.

லேசான மன வருத்தம்
இதனிடையே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே கூட லேசான மன வருத்தம் இருப்பதால் அதனையும் சரி செய்ய குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் பேசி வருகிறார்களாம். இந்த முயற்சிகள் மட்டும் ஒர்க் அவுட் ஆகிவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு உற்சாகத்துடன் சசிகலா தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து மக்கள் சந்திப்பார் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

நடராஜன் இல்லை
சசிகலாவின் கணவர் நடராஜன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், குடும்ப உறவுகள் இந்தளவுக்கு பிரிந்து சென்றிருக்க விட்டிருக்கமாட்டார். உடனுக்குடன் பேசி முடித்து சுமூகமாக்கிவிடுவார். அந்த ஆற்றலும் திறமையும் அவருக்கு நிறையவே இருந்தது. அவர் இல்லாத குறை தான் இன்று சசிகலாவுக்குமே இவ்வளவு சிக்கல்கள் வந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜ தந்திரத்துடன் காய் நகர்த்தி பேச வேண்டிய இடத்தில் பேசி காரியம் சாதிப்பதில் மிகக் கெட்டிக்காரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications