கொரோனாவுக்கு முதல் பலி.. சாத்தான்குளம் தந்தை, மகன் பலி.. தணிகாச்சலம் கைது.. தமிழகத்தை உலுக்கிய 2020
சென்னை: 2020ம் ஆண்டில் தமிழகத்தை பல சம்பவங்கள் உலுக்கின. அப்படியான முக்கியமான டாப் 5 சம்பவங்களின் தொகுப்பு இதோ:
Recommended Video
சீனாவிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது 2020ல்தான். கொரோனாவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக ஒருவர் பலியானபோது, மொத்த தமிழகமும் அதிர்ந்து போனது.

கொரோனாவால் ஆல்-பாஸாகினர் 10ம் வகுப்பு மாணவர்கள். முதல் முறையாக இப்படி ஒரு சான்ஸ் மாணவர்களுக்கு கிடைத்தது. தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதால், வாழ வைத்த தெய்வமே என்று முதல்வருக்கு பேனர் வச்சி கொண்டாடினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் லாக்அப்பில் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பெரும் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடித்தது. ஒரு வழியாக, சம்மந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு, பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்றது.
சித்தமருத்துவர் தணிகாச்சலம் கைது சம்பவத்தையும் இந்த பட்டியலில் சொல்லலாம். கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்ததாக கூறியதால் கைது செய்யப்பட்டார், தணிகாச்சலம். பொது மக்கள் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications