இழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவுடன் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 2 தொகுதிகளை பெறுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஏற்கனவே இந்த இரு கட்சிகளும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகள் நடுவே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எங்கள் கட்சி சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டோம். பதிலுக்கு திமுக தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி விட்டு, மீண்டும் திமுகவிடம் எங்கள் பதிலை தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில் 2 தொகுதிகளுக்கு சம்மதம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக இன்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலவே இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை வலியுறுத்தி வந்தது. எனவேதான், தொகுதி உடன்படிக்கையில், காலதாமதம் ஆனது.
ஆனால் திமுக தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து 2 தொகுதிகளுக்கான கூட்டணி உடன்படிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடுவே இரு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக முடிவு செய்ததாக அறிவித்தனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்று காலை இது பற்றி ஆலோசித்து தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை இருப்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதித்தது.
அந்த அடிப்படையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இரு தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதோடு சேர்த்து 21 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications