என்ன கோபத்தில் இருந்தார்ன்னு தெரியலையே.. எடப்பாடி பற்றி செங்கோட்டையன் சொன்ன அந்த வார்த்தை.. போச்சே
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி மாஜி அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன விஷயம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.

செங்கோட்டையன் எடப்பாடி பேச்சு
சத்தியமங்கலம் தொகுதியில் என்னை எம் ஜி ஆர் போட்டியிட சொன்னார் அந்த தொகுதி எனக்கு புதிதானது அங்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டேன் என் பெயரை சொல் நீ வெற்றி பெறுவாய் என எம் ஜி ஆர் என்னிடம் சொன்னார் . எம்ஜிஆர் பெயரை சொன்னாலே போதும் தேர்தலில் வெற்றி பெறலாம். சாதாரண கிளை செயலாளராக தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து தலைவர்கள் அளித்து அழகு பார்த்தனர்.
எம்ஜிஆர் போலவே ஆளுமை மிக்க தலைவராக, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். தலைவர் எம்ஜிஆர் க்கு பிறகு ஆளுமை மிக்க தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது நீங்கள் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அவரும் கட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தினர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இயக்கம் உடைய கூடாது என்றுதான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். காலச்சக்கரம் சுழன்ற பின் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரை அப்போது முதல்வராக சசிகலா அறிவித்தார். கட்சிக்காக எல்லா பணிகளையும் நான் ஆற்றி இருக்கிறேன். எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் கட்சி உடையக்கூடாது என்று பார்த்தேன், என்று கூறினார்.
எடப்பாடி பற்றி பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி மாஜி அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன விஷயம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டம் சேர்கிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு வருகின்ற கூட்டம் எல்லாம் வேறு மாதிரி கூட்டம் ஆனால் தொண்டர்களின் மனநிலை வேறு என செங்கோட்டையன் பேசி உள்ளார். அதாவது அவருக்கு வரும் கூட்டம் காசு கொடுத்து வரும் கூட்டம் என்பது போன்ற தொணியில் பேசினார்.
முன்னதாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கப்பட்டு இருக்கிறார் என நேரடியாக விமர்சனம் முன் வைத்தார் செங்கோட்டையன். கிட்டத்தட்ட கோபமாக அவர் இந்த பதிலை அளித்தார்.
செங்கோட்டையன் பேச்சு
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை, என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications