11,922 கி.மீ தூரத்திற்கு.. தமிழ்நாட்டில் நடக்க போகும் சம்பவம்! இபி போர்ட் கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்
சென்னை: எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தில் உள்ள முக்கிய மின் உற்பத்தி நிலையங்களின் தற்போதைய உற்பத்தித் திறன், உச்ச மற்றும் குறைவான மின் தேவை நேரங்களில் சுழற்சி மாற்ற உற்பத்தி நிலைகள் (Peak vs Off-Peak Generation), மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (Power Purchase Agreement), மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மாநிலத்தின் மின் தேவையினை பொறுத்தமட்டில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 17,279 மெகாவாட் மற்றும் 18,584 மெகாவாட்டை எட்டியது. இந்த உச்சபட்ச மின் தேவையானது எவ்வித மின்தடையுமின்றி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 19,500 மெகாவாட், 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைகாலத்தில் மாநிலத்தில் மின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய பல்வேறு ஆதாரங்களிலிருந்து மின்சாரத்தை ஒருங்கிணைக்கும் விரிவான திட்டத்தினை தமிழ்நாடு மின்சார வாரியம் வகுத்துள்ளது. அதன்படி வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் (அனல், புனல், காற்றாலை, சூரியசக்தி மற்றும் எரிவாயு) முழுத்திறனுடன் செய்யும் மின்சாரம் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எதிர்பாராதவிதமாக அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் பொழுது கூடுதலாக கவனமாக கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுடன் மின்பரிமாற்றத்தின் வாயிலாக கிடைக்கப்பெறும் மின்சாரம் மற்றும் குறுகியகால ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையும் ஒருங்கிணைத்து மின் தேவையினை பூர்த்தி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரை, கோடைகால மின் தேவையை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 400 கி.வோ. திறன் உள்ளிட்ட 23 புதிய துணை நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு மின் வரப்பட்டுள்ளன. மேலும், 93 உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்பட்டு, மின்பளுவை சீராக்குவதற்காக 148 புதிய மின்னூட்டிகள் நிறுவப்பட்டு இயக்கத்தில் உள்ளன. மின்பகிர்மான மின்மாற்றிகளை பொறுத்தவரை, அதிக சுமையுள்ள 3,983 மின்மாற்றிகள், குறை மின்னழுத்த பிரச்சினை உள்ள 2,944 மின்மாற்றிகள் மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் 19,899 மின்மாற்றிகள் என மொத்தம் 17,826 புதிய மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோடைகாலத்தை எதிர்கொள்ளும் வகையில் 11,922 கி.மீ. நீளமுள்ள மின்கம்பிகள், 1,314 மின்மாற்றிகள், 1,895 கி.மீ. நீளமுள்ள புதைவட கம்பிகள் மற்றும் தமிழ்நாட்டில் தற்பொழுது +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் மாணவர்களின் தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டும், கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் வகையிலும், தடையில்லா மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய, அனைத்து துணை மின் நிலையங்களிலும் வரும் 30.04.2025 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யவேண்டாம் என தலைமைப் பொறியாளர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், இரவு நேரங்களில் மின் தடங்கல் ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து பொறியாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
மின் தடங்கல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மின்னகம் வழியாக பெறப்படும் குறைகள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தி, புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வலியுறுத்தினார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications